பின்பற்றுபவர்கள்

திங்கள், 3 பிப்ரவரி, 2025

2019 சுகமான சுமைகள்

 சரியாக 5 வருடங்கள் கழித்து, பூஜாவின் மனதில் மீண்டும் மலர்ந்தது அந்த காதல் கொடி. இடைப்பட்ட காலத்தில் பூஜா யாரையும் பார்க்கவில்லை. கல்லூரி வாழக்கை முடிந்து பூஜா நிஜ வாழ்க்கையில் கால் அடி எடுத்து வைத்து 2 வருடங்கள் ஆகிவிட்டன. ஷா அலாமில் ஒரு தனியார் photography நிலையத்தில் பணி புரிந்து வந்தாள்.  கை நிறைய சம்பளம், வீட்டு சுமைகளை தன் முதுகில் ஏற்றிக் கொண்டாள். வீட்டு செலவுகளை தானும் பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் பூஜாவிற்கு கல்லூரியில் இருந்தே தோன்றியது. இதைப் பற்றி தான் பூஜாவும் அவளின் தோழிகளும் எப்போதும் பேசிக் கொண்டு இருப்பார்கள். இறைவன் boologa திற்கு வருவதில்லை. அதனால் தான் எனக்கு இரு தோழிகளை அனுப்பி வைத்தான் போலும். இவர்கள்  இருவரும் அருகில் இருக்கும் போது என் வாழ்க்கை மிகவும் சுவாரசியமாக இருந்தது. அதை நினைத்து மனம் இப்பவும் ஏங்குகிறது.(2025)



27 July 2019

ஒரு நாள் பூஜாவின் childhood தோழி கை பேசியில் தொடர்புக் கொண்டாள். விரைவில், பழைய நண்பன் ஒருவனின் பிறந்தநாள் விழா நடக்கவிருக்க போவதாகவும் அதில் நான் கட்டாயம் கலந்துக் கொள்ள வேண்டும் எனவும் அவள் கேட்டுக் கொண்டாள். Childhood தோழி ஆயிற்றே மறுப்பு தெரிவிக்க முடியுமா? கொஞ்ச கஷ்டம் தான். பூஜா அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டாள். 


Birthday Party-க்கு செல்வதற்கும் முன்பாக, பழைய நண்பன் ஒருவனின் ig பக்கம் பூஜா கண்களில் பட்டது. நண்பன் என்று சொல்ல முடியாது; தெரிந்தத ஒரு நபர் என்று கூறலாம்.  என்றுமே அவனிடம் பேசாத பூஜா விற்கு அன்று மட்டும் என்னவாயிற்று என்று புரியவில்லை ஏதோ ஒரு குரல் உள்ளுக்குள் சொன்னது:
"அவனுக்கு ஒரு மெசேஜ் அனுப்பு."

அவளும் அனுப்பினாள்.
"Are you coming for the birthday party ?" அவன் பதில் சொன்னான், "Maybe. Will try." அந்த ஒரு "maybe" கூட பூஜாவுக்கு ஒரு வசந்தக் காற்றைப் போலவே இருந்தது. அந்த ஒரு சந்திப்பு பூஜாவின் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்த காத்திருந்தது.

Party-க்கு  தனது நெருங்கிய தோழியுடன் சென்றாள் பூஜா. அவளுக்கு ஒரு பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது. Party க்கு சில simple அலங்கரிப்பு தேவைப்பட்டது.  அதையெல்லாம் பூஜா party க்கு வருவதற்கு முன்பதாக வாங்கிவிட்டு வந்தாள். அவளது தோழியோ birthday நபருக்கு  அழகான காட்சி தொகுப்பு ஒன்றைத் தயார் செய்தாள். இருவரும் பிஸியாக இருந்தார்கள். அந்த நேரத்தில், அவன் வந்தான். அவனைப் பார்த்தவுடன் பூஜாவுக்கு உள்ளுக்குள் ஒரு வித உணர்வு பூத்தது. அவள் உள்ளம் நனைந்தது.
ஏதோ சென்ற பிறவியின் ஒரு பந்தம் போல் தோண்றியது, அவளுக்கு.



அவள் அவனை வரவேற்று, நெருங்கிய நண்பன் ஒருவனை நீண்ட நாட்கள் கழித்து பார்த்து பேசுவது போல் பேசிக் கொண்டிருந்தாள். அவனும் அவ்வாறே நடந்துக் கொண்டான்.பணிப்பொறுப்பைப் பற்றி பேசினாள். சாதாரண உரையாடல் போல இருந்தாலும் அந்த few seconds – இல் அவனுடைய பேச்சு அவளின் பெண்மையை மென்மையாக தட்டி எழுப்பியது.


இந்தச் சந்திப்பு ஒரு உணர்வின் தொடக்கம். நட்பா? காதலா? பழைய பிறவியின் பந்தமா? பூஜா அறியவில்லை.
ஆனால் ஏதோ ஒன்று, may be அந்த பையனின் கணிசமான பார்வையோ? அல்லது அன்பான பேச்சோ ? அல்லது comfortable? எவை பூஜாவை மென்மையாக ஈர்த்தது என்று தெரியவில்லை.  அவள் இதயத்தின் ஒரு மூலை அவனுக்காக திறந்தது. பூஜா மற்ற நண்பர்களுடன் சேர்ந்து சில பழைய புகைப்படங்களை வைத்து எளிய அலங்காரம் செய்தாள். நிகழ்ச்சிக்கு வந்த அனைவரும் அந்த பழைய பள்ளி புகைப்படங்களை பார்த்தபோது, நெஞ்சில் நிறைந்த நினைவுகளின் பாதையில் பயணம் செய்தது போல இருந்தது.

ஆசிரியர்கள் வந்தனர், birthday நபர் அனிச்சல் வெட்டினார். ஆசிரியர்கள் உரையாற்றினர். அதன் பிறகு, அனைவரும் சேர்ந்து காட்சி தொகுப்பைப் பார்த்தோம். அது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. நாங்கள் நேரத்தைக் கடந்து, பழைய நாட்களுக்குத் திரும்பிப் போன உணர்வு.

நிகழ்வுக்கு வந்தவர்கள் அனைவரும் தெரிந்தவர்கள் தான் என்பதால் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தத்தம் வாழ்க்கையின் updates களைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் பேச சொன்னார். பின் ஒவ்வொரு வகுப்பு பிரதிநிதியும் உரையாற்றினார். எங்கள் வகுப்பிலிருந்து என் தோழி பே‌சினா‌ள். பணி பொறுப்பைப் பற்றிக் கேட்டனர். அவளும் ஒரு flow- இல் இன்றைய குழந்தைகள் ஆசிரியர்களை மதிப்பதிலும் மரியாதை காட்டுவதிலும் குறைவாக உள்ளனர் என்று பகிர்ந்தாள். எங்கள் காலத்தில் ஆசிரியர்களை பார்த்தால் பயமும் மரியாதையும் இருந்தது, இப்போது அப்படி ஒன்றும் இல்லை.




மேலும், “நீங்கள் பெற்றோராகும்போது, உங்கள் குழந்தைகளை கண்மூடித்தனமாக நம்பி, குற்றத்தை ஆசிரியர்கள்மீது சுமத்தாதீர்கள்” என்றும் சொன்னாள். அவள் அப்படி பேசுவாள்  என்று யாரும் எதிர்பார்க்கவில்லை; எனவே அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.

பிறகு நாங்கள் புகைப்படங்கள் எடுத்தோம். நான் கொண்டு வந்த போலராய்டு கேமராவால் புகைப்படங்கள் எடுத்து, அதை நினைவாக ஆசிரியர்களுக்கு கொடுத்தேன். அனைவரும் குழு புகைப்படம் எடுத்தோம். ஆசிரியர்கள் வீடு திரும்பினர். ஆனால் நாங்கள் அங்கேயே இருந்தோம்.

நான் மற்றும் என் தோழி வீடு திரும்ப வேண்டும் என்றிருந்தோம். ஆனால் எங்கள் நண்பர்களில் ஒருவர் “காலை வரை தங்கிவிட்டு போங்கள்” என்று வலியுறுத்தினார். அதனால் நாங்களும் தங்க முடிவு செய்தோம். எனக்கு அங்கே தங்க வேண்டிய ஒரு காரணம் இருந்தது…
அந்த பையன். ச‌ரி வாழ்க்கை எங்கு தான் அழைத்து போகிறது என்று பார்ப்போமே என நினைத்தாள். மற்ற நண்பர்களுடன்
பேசி கொண்டிருந்த பூஜா திடீரென கோபபட்டாள். அதை கவனித்த அந்த பையன் என்னவாயிற்று என்று வினவினான். தன் நெருங்கிய தோழியைப் பற்றி என்னிடமே இழிவாக பேசினாள் கூட்டத்தில் ஒருத்தி.  எல்லோரும் சூழ்நிலை மற்றும் அனுபவத்திற்கு ஏற்றவாறு தான் செயல்படுவார்கள். சின்ன வயதில் அவள் நடந்து கொண்டதை வைத்து இப்பொழுதும் அப்படி தான் இருக்கிறாள் என்று ஊகிப்பது மிகவும் தவறு. பிறரை சந்திக்கும் போது எப்பொழுதும் kind heart ஆக இருப்பது நல்லது. அதை விட்டு விட்டு இவள் அப்படி அவன் இப்படி என்று புகார் கூறுவதை நிறுத்துங்கள் என்று கூறினேன்.  என் தோழி அங்கு இல்லை. நான் என் தோழிக்காக பேசியது அவனை உள்ளூர கவர்ந்தது போலும்,  என்னையே பார்த்து கொண்டிருந்தான்.
நான் அவனருகே தான் உட்கார்ந்து இருந்தேன் அல்லது அவனருகில் நிழலாய் நானிருந்தேன், இப்படி கூட சொல்லலாம்.

அவனோடு இடைவிடாமல் உரையாடியபோது, உலகமே மெதுவாய் மறைந்தது… நான் அவனின் சொற்களிலேயே அமைதியை கண்டேன்.
" விடிய விடிய பேசிக் கொண்டே இருக்கலாம்,  யாருக்கும் தெரியாமலே " என்ற பாடல் பூஜாவின் நினைவுக்கு வந்தது.  திடீரென பூஜா தடுமாறினாள்,  அவன் குரலின் ஓசை கேட்டு அல்ல,  நிஜமாகவே தடுமாறினாள். கழிவறைக்கு செல்கிறேன் என்று சொல்லி அங்கிருந்து அகன்றாள். நீர் துளிகளால் முகத்தை மலரவிட்டு கதவை திறந்து வெளியே வந்தாள்.  அங்கே அவன் அவளுக்காக காத்திருந்தான். கழிவறை வாசலில். அதைக் கண்டவுடன் பூஜாவின் மனத்தில் இனிய சலனம் ஏற்பட்டது. "எல்லாம் ok தானே" என்று கேட்டான். பூஜாவும் தலையை ஆட்டியவாறே அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஏன் என்னை பின் தொடர்ந்தாய் என்று கேட்ட போது "நீ சரியாக இல்லை,  உன் கால் தரையில் படவில்லை! அதனால் தான் வந்தேன் " என்றான்.  அவனின் அக்கறைச் செயல், பூஜாவின் இதயத்தை பனித்துளி போல உருகச் செய்தது.

பிறகு, மற்ற நண்பர்கள் நடனம் ஆட அழைத்தனர்.  நடனம் என் நேசம்; 2000- தின் இசை ஓசையில், என் உடல் அலைபோல் அசைந்தது. அங்கு வந்த நண்பர்களுள் ஒருவன் என்னை அவனுடன் ஆட அழைத்தான். நானும் உடன் சென்றேன்.  "அவனுடைய" இரு விழிகளும் என்னை விட்டு நகரவில்லை. அலையே சிற்றலையே கரை வந்து வந்து போகும் அலையே எனும் வரிகளில் நான் மூழ்க அந்த நண்பன் என் கைகளைப் பிடித்து என்னை சில முறை சுழற்றினான். நானும் காற்றை தள்ளி கொண்டு சுற்றினேன்; என் ஆடையும் என்னுடன் சேர்ந்து சுற்றியது. அனைவரின் பார்வை என் மேல் இருந்ததைவிட அவன் பார்வை எங்கே இருந்ததது என்று தான் மனம் அலறியது.





ஒரு வழியாக,  நடன கச்சேரியும் முடிந்தது. அனைவரும் உறங்க தயாராகினர். என் மனம் அவனிடம் மீண்டும் பேசத் துடித்தது.
ஆனால் அதற்கு காலம் துணை வரவில்லை. நான் அங்கே தங்குவதற்கு முன்,  பல முறை என்னிடம் கேட்டான் நான் அங்கு தங்குகிறேனா இல்லையா என்று. உறங்க செல்வதற்கு முன் அவனை சந்தித்து கேட்டேன் " நீ எப்போது இல்லம் திரும்புகிறாய்" என்று.  தெரியவில்லை,  ஆனால் நீ எழுந்து கொள்வதற்குள் நான் கிளம்பி விடுவேன் என்று பதில் அளித்தான். நானும் சரி வேறு ஒரு நாள் சந்திக்கலாம் என்று கூறி உறங்க சென்றேன்.  என் தோழியும் உடன் வந்தாள்.  மறுநாள் எனக்காக ஒரு இன்ப அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.


நான் காலையில் எழுந்ததும் அவனை தேட சொல்லி என் கால்கள் அடம் பிடித்தன. என் கண்கள் அலை பாய்ந்தன. அவன் அங்கு இல்லை. முகத்தை அலம்பி விட்டு, பற்களை துலக்கி விட்டு விரைவாக சென்று என் கை தொலைபேசியை எடுத்தேன். அதில் அவனிடம் இருந்து ஒரு குறுந்தகவல் வந்திருந்தது. அதை கண்டவுடன் பூஜாவின் மனம் குளிர்ந்தது. சட்டென்று திறந்து படித்தாள்.  " Hey, I came to see you..but you were sleeping, I didnt want to disturb you. Will catch you someother time. Take care" என்று இருந்தது. அதை படித்ததும் பூஜாவிற்கு அளவில்லா மகிழ்ச்சி.  இது போன்ற உணர்வுகளை முதல் முறை உணர்கிறாள். ஏற்கனவே, தோன்றியது ஒரு தலை காதல் அல்லவா! தான் உறங்கி கொண்டிருக்கும் போது ஒருவன் தன்னை பார்த்திருக்கிறான் தூக்கத்தை கலையாமல் சென்றுள்ளான். Sweet இல்லையா!

பிறகு பூஜா தனது  பையைத் pack செய்யும் போது, அதன் உள்ளே ஒரு சூரியக் கண்ணாடி (shade) இருந்தது. முதலில் அது தனதுதான் என நினைத்தாள். ஆனால் அருகே பார்த்தபோது அது வேறொருவருடையது போலத் தோன்றியது. கார் எடுக்கும்போது திடீரென நினைவுக்கு வந்தது. அந்த shade தன் நண்பன் அணிந்திருந்தான் என்று.

உடனே அவருடைய நெருக்கமான இன்னொரு நண்பரிடம் அதை ஒப்படைக்கலாம் என்று நினைத்தாள். ஆனால் முன்பே அந்த shade அவருடையதா என்று உறுதிப்படுத்த வேண்டுமே! எனவே அவனுக்கு மெசேஜ் அனுப்பினாள்.

"உன் shade தவறுதலாக என் பையில் வந்துவிட்டது. நான் அதை உன் நண்பரிடம் கொடுத்துவிடுகிறேன்."

அதற்கு அவன் உடனே பதில் அளித்தான் 

"இல்லை, இல்லை, அப்படி செய்யாதே. நான் வந்து உன்னிடமிருந்து எடுத்துக்கொள்கிறேன்."

அவர் அனுப்பிய செய்தியை நான் வாசித்தபோது, நான் ஆச்சரியப்பட்டேன். அப்போது எனக்குத் தெரிந்தது அவன் தன்னுடைய shade- ஐ எனக்காகவே விட்டுச் சென்றான் என்று. அது தவறி செய்தது இல்லை.

அந்தச் சிறிய செயல் எனக்குள் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது.யாரோ என்னைக் கவனித்தது போல…யாரோ என்னைக் காண முயற்சி செய்தது போல…அந்த உணர்வு என்னை சில நிமிடங்கள் அமைதியாக்கியது. இவையெல்லாம் பூஜாவிற்கு புதிதாக இருந்தாலும் உள்ளூர அகம் மகிழ்ந்தாள். 


அந்தச் சந்திப்பிற்குப் பிறகு இருவரும் தொடர்ந்து வாட்ஸ்அப்பில் பேசத் தொடங்கினர். தினமும் எதையாவது பகிர்ந்துகொண்டனர். சாதாரண விஷயங்களிலிருந்தே உரையாடல் ஆரம்பித்தாலும், அவனிடம் பேசுவது எப்போதும் சுவாரசியமாக இருந்தது. தனக்கு தெரியவில்லை என்றாலும் கனிவாக பேசி அவளுக்கு எடுத்துச் சொன்னான். ஒரு போதும் "நீ ஆசிரியர் தானே,  உனக்கு இது கூட தெரியாதா " என்று கேட்டதே இல்லை.  அது அவளுக்கு மேலும் comfortable ஆக பேசத் துணைப்புரிந்தது. அவன் பேச்சு எப்போதும் மரியாதை கலந்ததாகவே இருக்கும். 

அவன் எனக்குப் Northern Lights (வட திசை ஒளிகள்) பற்றி சொல்லித் தந்தான். வானம் நிறங்களால் மினுங்கும் அந்த அதிசயத்தைப் பற்றியும், அதை நேரில் பார்க்க  வேண்டும் என்ற அவன் ஆசையையும் பகிர்ந்தான். அவன் தனது பணியைப் பற்றியும் பேசினான். அவன் ஒரு engineer, தனது வேலையை உயிராக நேசிப்பவன்.

வெளிநாட்டில் இருக்கும்போது, பணக்காரர்களுக்கான தனியார் விமான நிலையத்தில் பொறியியலாரர் ஆக இருந்தான். “எனக்கு என் வேலை மீது உள்ள அன்பு எப்போதும் மாறாது,” என்று சொன்னான். மலேசியாவுக்கு திரும்பியபின், மீண்டும் தனது engineer training தொடர்வதற்காக முயற்சி செய்து கொண்டிருந்தான். "Mr.Sky" தன்னம்பிக்கை நிறைந்தவன்.

அவன் எனக்குப் பல விஷயங்களைச் சொல்லித் தந்தான் , lucid dream என்றால் என்ன, தமிழ் பாடல் வரிகள், மற்றும் வாழ்க்கை பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்.

ஒருநாள் நான் என் அம்மாவுடன் சண்டை போட்டேன். அந்தக் கோபத்தையும் கசப்பையும் அவனிடம் பகிர்ந்தேன். அப்போது அவன் மிகவும் அமைதியாகக் கேட்டு, மெதுவாகச் சொன்னான் அம்மாவை நம்பிக்கையுடன் நடத்தணும். அவளுக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டான் . நான் அவருக்கு special ஆக எதுவம் பிடிக்காது என கூறினேன்.

அவன் ஒரு யோசனைச் சொன்னான்.

“அவளுக்காக ஒரு  facial அல்லது medicure/pedicure  புக் பண்ணு. சொல்லாமல் அவளை அழைத்துக் கொண்டு போ.”

நான் சிரித்தேன். “அது அவளுக்கு பிடிக்காது,” என்றேன்.

அவன் சிரித்தபடி சொன்னான்...

“பூமியில் எந்த பெண்ணுக்கும் அப்படி ஒரு பராமரிப்பு பிடிக்காதது கிடையாது. எல்லா பெண்களும் ஒருமுறை ஆனாலும் தங்களை பராமரிக்க விரும்புகிறார்கள்.”

அவனது வார்த்தைகள் எளிமையாக இருந்தாலும், என் மனதில் ஆழமாக பதிந்தன. அவன் சொன்னபடி நான் செய்தேன். அம்மா மிகவும் மகிழ்ந்தார். அந்தச் சிறிய செயல் எங்களை மீண்டும் இணைத்தது.

அந்த நாளிலிருந்து, நான் அவனை இன்னும் வேறுவிதமாகப் பார்த்தேன். அவன் ஒரு நண்பனாக மட்டுமல்ல, வாழ்க்கையை ஒரு புதிய கோணத்தில் காணச் செய்த ஒருவராகவும்.

பிறகு, நாங்கள் எங்கள் காதல் கதைகளைப் பற்றி பேசத் தொடங்கிய அந்த மாலையில்,
நான் அவனிடம் சொன்னேன்,
என் முதல் காதல் என்  கல்லூரியில் தான் நடந்தது என்று.( refer to 2013)

அவன் மௌனமாய் இருந்தான், பிறகு மெதுவாக சொன்னான்...
“ஏன் ஒருவர் காதலில் அழகைக் காண்கிறார்?
காதல் என்றால் வெளிப்புறம் அல்ல,
அது உன் soul- லை காண்பது.”

அவன் சொன்னான்,
“நீ அழகானவள், எப்படியிருந்தாலும்.
உன் சருமத்தின் நிறம், அதன் அமைப்பு,
அவை உன் அழகை குறைக்காது,
அவை உன்னை தனித்துவமாக ஆக்குகின்றன.”

அந்த நாள் முதல், நான் அதை நம்பத் தொடங்கினேன்... அழகு கண்ணாடியில் விழும் பிம்பத்தில் இல்லை, மனதில் இருக்கிறது. ஒருவர் யோசிப்பதில் இருக்கிறது, ஒருவர் செய்கையில் இருக்கிறது. இன்று, நான் என் உருவத்தோடும், என் நிறத்தோடும்,
என் குறைகளோடும் பெருமைக்கொள்கிறேன். ஏனெனில் இது  எனக்கு அவன் கற்றுக்கொடுத்தது.
இயற்கையாக உருவாகியதை காதலிக்க கற்றுக்கொள், அப்போதுதான் உண்மையான அழகு மலரும். 🌸

அந்த நாளுக்கு பிறகு,
என் மனம் மெதுவாக அவன் திசைக்கு நகரத் தொடங்கியது. அவன் சொன்ன வார்த்தைகள், என் இதயத்தின் ஓரங்களில் ஒலி போல் ஒலித்தன.

அவன் பெயர் வந்தாலே, என் உள்ளம் சிறிது துள்ளியது.  அவன் சிரிப்பை நினைத்தாலே,
என் முகத்தில் ஒரு வெளிச்சம்.
எனக்குத் தெரியாமல், அவன் என் தினத்தின் ஒரு பகுதியாகிவிட்டான்.  காலை வெளிச்சத்தில் அவன் நினைவாகவும்,
இரவு அமைதியில் அவன் குரலாகவும்.
அவன் இருந்த இடம் தொலைவில் இருந்தாலும், அவன் உணர்வு அருகில் இருந்தது. தன்  இதயம் சிறுக சிறுக தன்னை விட்டு அவனிடம் செல்வதை பூஜாவால் உணர முடிந்தது, ஆனால் அவளால் அதை தடுக்க இயலவில்லை. அதை தடுக்கவும் அவள் நினைக்க வில்லை.

அது காதல் அல்லவா என்று நான் எண்ணினேன், ஆனால் அது அதைவிட ஆழமானது. ஒரு soul இன்னொரு soul லைக் கண்டுகொள்ளும் அந்த அதிசயம். 🌙 

அந்த நாட்களில் பூஜாவின் இதயம்  அடக்க முடியாத அளவுக்கு அவனை நேசித்தது.
அவனைப் பற்றிய எண்ணங்கள் அவளின் இரவுகளிலும், கனவுகளிலும் கலந்துவிட்டது.

பல மாதங்கள் கழித்து, அவனின் பிறந்தநாள் வந்தது.
அன்று பூஜா ஒரு முடிவெடுத்தாள். தன் உணர்வுகளை மறைக்காமல் சொல்ல வேண்டும் என்று. தைரியமானவள் பூஜா. எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளும் மன நிலையில் தன்னை வைத்துக் கொண்டாள் பூஜா.

அந்த மாலை, அவளின் காருக்குள் ஒரு சிறிய பிறந்தநாள் விழா.
சிறிய கேக், ஒரு மெழுகுவர்த்தி,
மெல்லிய இசை, அவன் பெயர் அவளின் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பிலும் ஒலித்தது. அவன் அருகில் இருந்தான்,
அவனின் சிரிப்பு பூஜாவின் மனதை உருகச் செய்தது. அந்தச் சிரிப்புக்குள் அவள் தன் முழு தைரியத்தையும் சேர்த்துக் கொண்டாள்.

அவள் மெதுவாகச் சொன்னாள், “இன்று உனக்கு ஒரு விஷயம் சொல்லணும்…”

அந்த நிமிடத்தில், காற்றே நின்றது.
வானம் கூட கவனமாகக் கேட்டது போல.

அடுத்து என்ன நடந்தது தெரியுமா…?
அதுதான் பூஜாவின் வாழ்க்கை ஓட்டத்தை மாற்றிய ஒரு மௌனம்...

அவன் காருக்குள் வந்தபோது,
பூஜா மெதுவாக “பிறந்தநாள் வாழ்த்து” பாடலை ஒலிக்க வைத்தாள்.
அது ஒரு திறந்த பார்க்கிங் இடம் , வெயில் கதிர்கள் மெல்ல ஒளிர்ந்துக் கொண்டிருந்த நேரம். அந்த சிறிய காருக்குள், ஒரு சிறிய கேக், ஒரு மெழுகுவர்த்தி , ஆனால் அந்தச் சிறிய தருணம் பூஜாவின் இதயத்தில் பெரும் மகிழ்ச்சியை எழுப்பியது.
அவள் சிரித்தபடி சொன்னாள்,
“வா, உன் ஆசையை நினைத்து மெழுகுவர்த்தி ஊது.” அவன் சிரித்தான்,
அவன் கண்களில் அந்த நிமிடத்தின் மகிழ்ச்சி பிரகாசித்தது. அவன் மெழுகுவர்த்தியை ஊதினான்;
கேக்கை வெட்டினான். அந்த நொடியில் பூஜாவின் இதயம் துடித்தது. அவள் ஒரு சிறிய துண்டை அவனுக்கு கொடுத்தாள்,
அவன் அவளுக்கொன்று கொடுத்தான்.
இருவரும் அந்த இனிமையை பகிர்ந்துகொண்டார்கள்.
அது ஒரு சாதாரண நாள் அல்ல,
அது பூஜாவின் நினைவில் என்றைக்கும் நிலைத்திருக்கும் ஒரு பகல்.


அதற்குப் பிறகு, பூஜா மெதுவாகச் சொன்னாள்,
“நான் உன்னிடம் ஒரு விஷயம் சொல்லணும்...நீ எப்படி ரியாக்ட் பண்ணுவேன்னு தெரியல,
ஆனா என் இதயத்துல இருக்குறதைச் சொல்லாம இருக்க முடியல.” (scorpio trait)

அவள் மூச்சை பிடித்தபடி,
அந்தச் சொற்களை கவனமாகச் சேர்த்தாள் ...
“எனக்கு உன்ன புடிச்சிருக்கு....
ஒரு மனிதராகவும், ஒரு வாழ்க்கைத் துணையாகவும்.”

“நீ என்னோட வாழ்க்கையில் செய்த ஒவ்வொரு சின்ன விஷயமும்
எனக்கு மிக இனிமையான அனுபவம்.
நீ எவ்வளவு மரியாதையாக நடந்து கொள்றே, எவ்வளவு தைரியமா உன் கனவுகளைத் துரத்துறே,
எவ்வளவு திறந்த மனதுடன் என்கிட்ட பேசுறே , எனக்கு எதாவது தெரிலனா அதை பக்குவமாக எடுத்து சொல்ற, என்னுடைய குறைகளை எப்போதும் நீ ஒரு குறையா பார்த்தது இல்ல...இது எல்லாம் என்ன ரொம்ப கவர்ந்தது.

“என்ன பொருத்த வரைக்கும் நீ ரொம்ப ‘செக்ஸி’ன்னு சொல்வே. Sexy என்பது 
 பிறருடைய உடம்பு இல்ல, ஒருவருடைய சிந்தனை, யோசனை, எண்ணங்கள். உன்னுடையது மிகவும் கவர்ச்சியாகவும் அழகாகவும் இருக்கு. நீ அனுமதி கொடுத்தா,
இந்த வாழ்க்கைப் பயணத்தில் உன் கையைப் பிடிச்சு கிட்டு நீண்ட தூரம் பயணம் செய்யணும்னு ஆசையா இருக்கு..."

அவள் சொன்னதும்,
அவன் சில நொடிகள் அமைதியாக இருந்தான். அவன் முகத்தில் அதிர்ச்சி, ஆச்சரியம், சற்று குழப்பம்.
பிறகு மெதுவாகச் சொன்னான்
“நன்றி.”

பூஜா அவனை நோக்கி நின்றாள்,
அவனின் அடுத்த வார்த்தைகள் அவளின் இதயத்தைத் துண்டாக்கியது...

“உனக்கு இன்னும் என்ன பற்றிய பல விஷயங்கள் தெரியாது, நீ என்ன பற்றிக் கூறியது என்ன வெகுவாக கவர்ந்தது...உனக்கு என்ன எவளவு பிடிக்கும்னு நான் தெரிஞ்சிகிட்டேன்.. ஆனால்...ஆனால் என் வாழ்க்கையில் வேரொருவர் இருக்கிறார்.”

அவன் ஒரு நிமிட நிசப்தத்துக்குப் பிறகு தொடர்ந்தான்...“ நீ என் மேல் வைத்திருக்கும் அன்பை நான் மதிக்கிறேன். உன் மனம் புண் பட கூடாது. நீ மிகவும் நல்லவள்.எனக்கும் உன்னை பிடிக்கும் ஆனால் நீ நினைக்கிற மாதிரி இல்ல. இது ஒரு மரியாதை கலந்த அன்பு. நீ வாழ்க்கையில் வெற்றி பெறணும்,
நீ என்னை காட்டிலும் சிறந்த ஒருவரை தேர்ந்து எடுக்கணும், அவருடன் சந்தோஷமாக இருக்கனும். நான் உன்னிடம் ஆசை வார்த்தை பேசி இருந்தால் என்னை மன்னித்து விடு” என்றான். (அவன் அவ்வாறு பேசியது இல்லை, இருப்பினும் மன்னிப்பு கேட்டான். )

அவனின் பேச்சு பூஜாவுக்கு வலி தந்தாலும், மனதுக்கு இதமாக தான் இருந்தது ஏனெனில் அதில் இருந்த நேர்மை அவளின் இதயத்தைத் வருடியது. அந்த நொடியில், அவள் ஒரு உண்மையை உணர்ந்தாள். சில காதல்கள் சேர்வதற்காக இல்லை உள்ளத்தை விழிக்கச் செய்வதற்காக தான் வருகிறது என்று. 🌙

அவர் தனது வாழ்க்கையில் ஒருவரை வைத்திருக்கிறார் என்று சொன்னபோது, பூஜா ஒரு நிமிடம் அமைதியாகி விட்டாள்.
இத்தனை நாளாக அவருடன் பேசிக்கொண்டிருந்தாலும், அவள் ஒருபோதும் அந்தக் கேள்வியை கேட்டதில்லை... “உன் வாழ்க்கையில் யாராவது இருக்கிறார்களா ?” என்று.

அந்தச் சிந்தனை கூட அவளுக்கு தோன்றியதில்லை. அவன் அவளின் நாளைப் பற்றி கேட்டான், அவளின் நகைச்சுவையில் சிரித்தான்,
அவள் விருப்பங்கள் பற்றி கேட்டாள்...ஆனால் காதலின் சொல்லாடல்கள் ஒருமுறையும் இல்லை.
இவை அனைத்தும் இயல்பாக நடந்துகொண்டிருந்ததால்,
அவள் அவன் வாழ்க்கையில் யாரோ இருப்பார்கள் என ஒருபோதும் நினைக்கவில்லை.

அவன் சொன்ன அந்த ஒரு வாக்கியம் அவளை உறையவைத்தது.
“ஓ மை காட்… நான் இதை எப்படி தவறவிட்டேன்?” என்று பூஜா மனதில் குமுறிக்கொண்டாள். அவள் சற்று குழம்பி, சிறிது வருந்தியும் சொன்னாள், “நான் மன்னிப்பு கேட்கிறேன்… உன் வாழ்க்கையில் யாரோ இருக்கிறார் என்று எனக்குத் தெரியாது.”

அவன் அமைதியாக புன்னகைத்தான்.
அந்தக் கணத்தில் பூஜா உணர்ந்தாள்...
காதல் சில நேரங்களில் பதில் தேடுவதல்ல, பதிலாக நம்மை அறிந்துகொள்வதாம். 

அந்த காரில் நடந்த அந்த ஒரு நாளுக்குப் பிறகு, இரவு மெதுவாக வந்து என் ஜன்னலைத் தொட்டது. அந்த இருளோடு சேர்ந்து அவனிடமிருந்து ஒரு குறுந்தகவல் வந்தது.


அன்றிரவு, நாள் முடியும் நேரத்தில்,
அவன் கூறியது...“யாரும் எனக்காக malaysia- இல் இப்படி செய்தது இல்லை. நான் இதை ஒருபோதும் மறக்க மாட்டேன்.
இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி.”

அவனின் வார்த்தைகள் அமைதியாகப் பாய்ந்தன, மேலும் கூறினான் 
“நானும் உன்னை விரும்புறேன்...
ஆனா, நீ நினைக்குற மாதிரி இல்ல. நீ எனக்கு கொடுத்த நேரத்தை மதிக்கிறேன். நான்  உன்னை என்னுடைய நெருங்கிய தோழியாக நினைகிறேன் ஏனென்றால் அப்படி யாரும் இப்போது இல்லை என் வாழ்வில் "

அந்த ஒரு வாக்கியம்,
என் இதயத்தை இரண்டாகப் பிளந்தது.
சொற்கள் மௌனமானது,
சுவாசம் கனமானது.

அதற்குப் பிறகும் நாங்கள் பேசினோம்.
சில சிரிப்புகள், சில நிசப்தங்கள்,
சில “நாளை பேசலாம் ” என்று முடியும் உரைகள்.

ஆனா என் உள்ளம் மாறவில்லை.
எத்தனை தடவை மறக்க முயன்றாலும்,
அவனின் நிழல் என் நினைவில் தங்கிக் கொண்டே இருந்தது.


அவன் சொல்லிய ஒவ்வொரு சொல்,
அவன் சிரித்த ஒவ்வொரு முறை,
என் மனதில் மெதுவாக ஒலித்தது,
நானோ அதை விட முயன்றேன்... ஆனால் முடியவில்லை.

இன்றும் சில நேரங்களில்,
அவனுக்கு நான் ஒரு செய்தி அனுப்புவேன்... “இந்த உணர்வு…
நீயும் நானும் பகிர்ந்த அந்த தருணங்கள் 
என் இதயத்தின் கதவுக்குள் என்றென்றும் பூட்டப்பட்டிருக்கும்.” 💫



நேரம் நகர்ந்தது…
நாள் இரவாகி, இரவு நினைவாகி,
நினைவுகள் மெதுவாக மழையாகப் பொழிந்தன.

பூஜா அவனை மறக்க முயன்றாள்;
ஓவிய கலையில் மூழ்கினாள், வேலைகளில் மறைந்தாள்,
ஆனால் மனதின் ஒரு மூலையில்,
அவனின் சித்திரம் மின்னிக் கொண்டிருந்தது.


அவன் அவளின் வாழ்க்கையில் ஒரு அத்தியாயமாக வந்தான்,
ஆனால் அந்த அத்தியாயம்,
முழு புத்தகத்தையும் அழகாக மாற்றி விட்டது.

அவன் அவளுக்கான முடிவு இல்லை, 
ஆனால் அவன் தான் அவளுக்கான விழிப்பு. 🌙

ஏனெனில் அவள் புரிந்திருந்தாள்,
சில காதல்கள் முடிவடையாமல்,
மனதின் ஒரு மூலையில் என்றும் மலர்வதற்காகத்தான் வருகிறது. 

அவன் சொன்ன வார்த்தைகள்
பூஜாவின் உள்ளத்தை மாற்றி அமைத்தன.
ஒரு காலத்தில் அவள் தன்னையே கேள்வி கேட்டாள் .. “நான் அழகா? நான் போதுமா?”
ஆனால் அவனின் குரல் அந்த சந்தேகத்தைச் சிதறடித்தது.

“நீ அழகானவள், எந்த வடிவத்திலும், எந்த நிறத்திலும், எந்த சாயலிலும்.” அந்த ஒரு நிமிடம், அவள் தன்னைக் கண்டுகொண்டாள். அவளின் insecurities அவன் சொற்களில் உருகிப் போனது. அவள் தன்னையே நேசிக்க கற்றுக் கொண்டாள். முதல் முறையாக, உண்மையிலே.

அவன், அவளின் வாழ்க்கையில் வந்தது ஒரு ஆசீர்வாதம். அவன் இருப்பு, ஒரு அமைதியான வரம்.

மாதங்கள் உருண்டு ஓடின. ஒரு நாள், அவன் திருமணம் செய்து கொண்டான்,
அவனின் காதலியுடன்.
பூஜாவும் அவனுடைய திருமணத்திற்கு சென்றாள். அவனின் திருமணப் தருணங்களை பார்த்தாள். அவன் சிரித்துக் கொண்டிருந்தான், மகிழ்ச்சியுடன். அவள் சிரித்தாள், அந்த சிரிப்பில் வலி இருந்தாலும்… சந்தோஷம் நிரம்பி இருந்தது.

அவள் அவனுக்கு கை குலுக்கி "Congratulations." கூறினாள். அந்த ஒரு சொல், அவள் இதயத்தின் முழு அன்பையும் தாங்கி இருந்தது.

ஏனெனில் சில நேரங்களில்,
நமக்குரியது நம்மிடம் இல்லாவிட்டாலும்,
அது நம்மை விட நல்ல கைகளில் தான் இருக்கிறது என்ற நினைவே நிம்மதியை தரும் 💫


- ஏனோ நீ
பார்த்ததாலே என்
தேசமிங்கே பூந்தோட்டமாக -

அடுத்தக் கதைக்காக காத்திருங்கள்… அதில் எதிர்பாராத திருப்பங்களும் உணர்ச்சிப் பெருக்கங்களும் நிறைந்திருக்கின்றன. ✨


சனி, 25 மே, 2024

2013


முதல் காதலின் நினைவுகள் பூஜாவின் நிகழ்காலத்தை கெடுக்க அவளின் மனம் இடம் கொடுக்கவில்லை. கல்லூரியில் அவள் கண் முன் அவன் நடந்து வருகையில், எதிரே யாரும் இல்லாதது போல் நடந்துக் கொண்டாள். தன்னுடன் பழகியவள் இப்போது தன்னை கண்டு கொள்ளாமல் செ‌ல்வது அவனுக்கு வருத்தமாக இருந்தது, தன்னுடைய மன பலத்தைக் கண்டு பூஜா பெருமிதம் கொண்டாள். இருப்பினும் இந்த காதல் நினைவுகளின் சுவடு என்றும் அழியா. 

சில மாதங்களுக்குப் பிறகு, பூஜாவின் மனம் எனும் பூங்காவில் மீண்டும் ஒரு வசந்த காலம். பூஜா மிகவும் இயல்பாக நடனம் ஆட கூடியவள். அவ்வப்போது நேரம் கிடைக்கும் போது, தன் senior களுடன் சேர்ந்து வெளி நிகழ்ச்சிகளில் கலந்து ஆடி மகிழ்ந்து வந்தாள். ஒரு நாள், பூஜா தன்னிலை மறந்து நடன பயிற்சியில் மூழ்கி இருந்த வேளையில்...


அங்கு வந்த ஒரு senior - இன் நண்பன் மீது இவள் கண் பார்வை விழுந்தது. அடர்த்தியான தலை முடி, வசீகரிக்கும் பார்வை, உதட்டோர புன் சிரிப்பு, சாக்லேட் நிற மேனி- Mr.Romeo. பூஜா நடன பயிற்சி  செய்வதை விடுத்து, அவன் தன் தோழிகளுடன் உரையாடுவதைக் கவனித்தாள்.  அவனைப் பார்த்த அக்கணமே அவளுக்கு காட்சி பிழை போல் தோன்றியது. அதை அவள் கண்கள் அவனுக்கு காட்டியிருக்கும்  போலும். அவனும் அதை இரசித்த வாரே அருகில் வந்து கை குலுக்கி தன்னை அறிமுக படுத்திக் கொண்டான். அவனுக்கும் நடனத்தில் ஆர்வம் மிகுதி என்பதை வெளிப்படுத்தினான். சிறிது நேரம் பேசிய பிறகு இருவரும் கை தொலைபேசி எண்களை மாற்றி கொண்டனர். பூஜா கலந்து கொள்ளும் கலை நிகழ்ச்சியில் Mr.Romeo தான் தனது partner என்பதை அறிந்த பூஜா மனம் நெகிழ்ந்தாள். அ‌ந்த கலை நிகழ்ச்சிக்கு இரண்டு வாரம் இடைவெளி இருந்ததால் பூஜாவும் Mr.Romeo வும் அடிக்கடி சந்தித்துக் கதைத்து வந்தனர். இருவருக்கும் பல விஷயங்களில் ஒற்றுமை இருந்தன.  உதாரணத்திற்கு,  கலை! நடன கலை தவிர்த்து ஓவிய கலை. Mr. Romeo வின் பேச்சை நாள் முழுவதும் கேட்கலாம் போன்று தோன்றியது பூஜாவிற்கு. Flirt பண்ணும் வகையில் அல்ல அவரின் பேச்சு ஆனால் எப்போதும் ஒரு வித அக்கறையோடு பேசுவது போல் இருந்தது. 


Stranger ஒருவர் தன் மீது அக்கறை காட்டுவது பிடித்திருந்தது பூஜாவிற்கு. இந்த அக்கறை தன்னிடம் எதையோ எதிர்பார்த்து வந்தது போல் இல்லை அவளுக்கு.  உள்ளம் கொள்ளை போனதோ உன்னை கண்ட நாள் முதல்...மனதில் பூத்த காதல் எனும் செடிக்கு ஒவ்வொரு நாளும் நீர் ஊற்றி வந்தாள். இவ்விருவரின் உறவை கல்லூரியில் அனைவரும் கவனித்தனர். இதை எதையுமே பொருட்படுத்தாமல் பூஜா அவனுடன் இயல்பாக பழகி வந்தாள். Mr.Romeo வுடன் பேசும்போதெல்லாம் அவர் மிகவும் ambitious ஆனவர் என்பதை தெரிந்துக்கொள்வாள். எப்போதும் தன் profession- இல் சாதிக்க வேண்டும் என்றே பேசிக் கொண்டிருந்தார். Mr Romeo எதையெல்லாம் இரசிகின்றாறோ அதையெல்லாம் தானும் இரசித்து வந்தாள். 

அப்படியே சில மாதங்கள் உருண்டு ஓடின. பூஜா சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தன் காதல் உணர்வுகளை மறைமுகமாக Mr Romeo வுக்கு வெளிப்படுத்தினாள். தன் வாழ்க்கை துணையைப் ப‌ற்‌றி பெற்றோர்களிடம் சொல்ல தன்னை தயார் படுத்திக் கொண்டாள். அதே வேளையில்  Mr.Romeo தன் காதலுக்கு பச்சை கொடி தான் காட்டுவார் என்று மனதார நினைத்தாள். காதல்  மோகத்தில் மயங்கி இருந்த பூஜாவிற்கு தெரியவில்லை இன்னும் சில நாட்களில் தன் மனம் சுக்கு நூறாக உடைய போகிறது என்று. 



ஒரு மாத விடுமுறையும் வந்தது. அனைவரும் தத்தம் hometown க்கு திரும்பினர். பூஜா இந்த விடுமுறை முடிந்ததும் தன் மனதில் பூத்த காதலை Mr. Romeo விடம் சொல்லி விடலாம் என்று நினைத்தாள். விதி மாறாக வேறு ஒன்று நினைத்தது. 




ஒரு நாள் பூஜா காய்ச்சலில் இருக்கும் போது அவள் கை தொலைபேசி அலறியது. கை தொலைபேசி screen இல் அவள் கண்ணாளன் பெயரைக் கண்டவுடன் பூஜாவின் உடல் வெப்ப நிலை மேலு‌ம் கூடியது இன்ப அதிர்ச்சியால். உடல் நலம் சரியில்லை என்றதும் Mr.Romeo அவளை 100plus வாங்கி குடிக்கச் சொன்னார். இது போன்ற அக்கறை வார்த்தைகள் தான் பூஜாவின் மனதை கவர்ந்தது. பூஜா அவன் குரலைக் கேட்டவாறே கனவுலகத்தில் மிதந்தாள். சிறிது நேரம் கழித்து, Mr.Romeo மீண்டும் பேசத் தொடங்கினார். நாம் இருவரும் நண்பர்களாகவே இருப்போமா அது தான் எனக்கு சரி என்று படுகிறது என்று கூறினான்.


 " காதல் எனும் சொல்லை நானும் சொல்ல வில்லை; சொல்ல வந்த நேரம் காதல் எந்தன் கையில் இல்லை " பூஜாவிற்கு இந்த பாடல் வரிகள் தான் நினைவில் பிறந்தது. என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்து நின்றாள். எதையும் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல், அடையாளம் இல்லா ஒன்றை கண்டால் இதயத்தின் ஓரம். மனதை கல்லாக்கிக் கொண்டு சரி என்று சொன்னாள். தொலைபேசி அழைப்பைத் துண்டித்து விட்டு தன் தலையணை தேடி ஓடினாள் பூஜா.




 சில மணி நேரம் கழித்து தன் தாயாரின் குரல் கேட்டு அறையை விட்டு வெளியே வந்தாள். எது எப்படி இருந்தாலும் தன்னை ஏற்க மறுத்த உண்மையான காரணத்தைக் கூறியதால் அவனுடைய நேர்மையை மதித்தாள் ; இரசித்தாள். 

மீண்டும் கல்லூரிக்குச் சென்ற போது அவனைக் கண்டாள்.  ஆனால் முன்பு போல் அவளால் அவனிடம் இயல்பாக பேச முடியவில்லை. பழைய நினைவுகள் அவளை வெகுவாக வாட்டியது. என்ன தா‌ன் இருந்தாலும் இவள் Scorpio ஆயிற்றே! ஒரு முறை முடிவு எடுத்தால் அதை மீற மாட்டாள். முடிவு எடுத்து விட்டாள்! வேண்டாம் என்று! 

பூஜா சில வாரங்களுக்கு பிறகு Mr. Romeo வை கல்லூரியில் ஒரு பெண்ணுடன் பார்த்தாள். அவர்கள் பழகும் விதத்தை வைத்து இருவருக்கும் இடையே உள்ள தொடர்பைப் புரிந்துக் கொண்டாள். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இது தான் பூஜாவிற்கு strong ஆனா காரணமாக இருந்தது அவனை மறக்க.

நீங்கள் எப்படி உணர்வீர் ஒரு வேளை நீங்கள் காதலித்த ஒருவர் வேரொருவர் உடன் உங்கள் கண் முன்னே நெருக்கமாக பேசிக் கொண்டிருந்தால் ? அப்படி தான் இருந்தது பூஜாவிற்கும். 

அப்படியே மூன்று ஆண்டுகள் கழிந்தன. இந்த காதல் நினைவுகளை மறக்க கை கொடுத்தது பூஜாவின் நண்பர்களே. ஒரு நாள் பூஜா கல்லூரியின் ஒரு அறையில் தனியே இருந்த போது பக்கத்து அறையில் யாரோ பேசிக் கொள்ளும் சத்தம் கேட்டது. அவர்களின் உரையாடல் பூஜாவின் காதில் விழுந்தது.  மறு நொடி இதயம் கிழியும் ஒலி கேட்டது. "அவளுடைய தோற்றம், குரல் அனைத்தும் அவன் எதிர்பார்த்த மாதிரி அல்ல அதனால் தான் அவன் அவளை ஏற்க மறுத்தான்." பூஜாவிற்கு 100 சதவீதம் தெரிந்தது இவர்கள் யாரைப் பற்றி gossip  பேசினார்கள் என்று. முன்பு அவன் அவளை ஏற்க  மறுத்த காரணம் கூறியது அவளுக்கு நினைவுக்கு வந்தது." என்னால் உன் காதலை எளிதில் ஏற்றுக் கொள்ள முடியும் ஆனால் நான் உனக்கு loyal ஆக இருப்பேனா என்பதை உறுதியாக சொல்ல முடியாது" 

உண்மையானக் காரணத்தைத் தெரிந்து கொண்ட பூஜா அவனுக்கு அவசரமாக ஒரு குறுந்தகவல் அனுப்பினாள். அவனும் அதைப் படித்து விட்டு அவளைச் சந்திக்க வந்தான்.  



"நீங்கள் இவ்வாறு நடந்துக் கொள்வீர் என நான் நினைக்கவில்லை",என்றாள். எதுவும் புரியாமல் சற்று நேரம் திகைத்து நின்றான். "வெளித்தோற்றத்தைப் பார்த்து வருவதல்ல காதல். அது ஒரு விதமான உணர்வு. அதைச் சொல்லால் வரையறுக்க இயலாது. அவனுடைய கண்களைப் பார்த்தால் போதும், அவனுடையக் குரளைக் கேட்டால் போதும், அவன் தோளிள் சாய்ந்தால் போதும், அவன் கைகளைக் கோர்த்தால் போதும், அவன் நினைப்பை சுவாசித்தால் போதும் வேறு எதுவும் தேவையில்லை என தோன்ற வைக்கும் ஓர் உணர்வு. அவ்வாறு தான் நான் உணர்ந்தேன் உன்னுடன் பழகும் போது. ஆனால் உனக்கோ நிரந்தர மற்ற ஒன்றின் மீது தான் மோகம் அதிகம். பராவா இல்லை, இப்பொழுதாவது உன்னைப் பற்றித் தெரிந்துக் கொண்டேனே" என்றாள். உன் மனதைப் புன் படுதியதற்காக நான் மன்னிப்புக் கேட்கிறேன் என்றான் அவன். "அழகு என்பது முகத்தைக் குறிப்பது அல்ல ஒருவர் மனதைக் குறிப்பதாகும். இன்று நீ என் கண்களுக்கு அழகாக தெரியவில்லை " என கூறி தன் விழிகளில் இருந்து வடிந்த கண்ணீரைத் துடைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தாள் பூஜா.


தான் அவளை இதற்கு முன் treat செய்த விதத்தைக் கண்டு வெட்கப்பட்டான். அவள் நடந்து செல்வதைப் பார்த்த வாரே தன் தவறை எண்ணி மனம் வருந்தினான். இருந்தும் இது பூஜாவிற்கு இனிய வலிகளே.


2012

 




முதல் காதல் முதல் முத்தம் இரண்டும் மறக்குமா ! 2012- இல் ஒருவருடன் நெருக்கம் ஏற்பட்டது பூஜாவிற்கு. அந்த உறவிற்கு பெயர் ஏதும் சூட்ட முடியாது. பூஜாவின் நேசம் obsession ஆக மாற தொடங்கியது. அவனுக்காக கல்லூரியில் பல உதவிகள் செய்வதில் அகமகிழ்ந்தாள்; பண செலவுகள் உட்பட. அவ்வப்போது அவனும் அவளை மகிழ்வித்து வந்தான். அவள் அவன்  மீது கொண்ட நேசம் அ‌ந்த கடலை விட பெரியது இருப்பினும் அவள் அதை வெளிப்படுத்திய முறைகள் ஏதும் அவனுக்கு பிடிக்கவில்லை. 

நாளடைவில் பூஜாவின் நேசம் அவனுக்கு ஒரு பெரிய தொல்லையாக தென்பட்டது. பிரிவு தான் ஒரே வழி எ‌ன்று நினைத்தான். கல்லூரியில் வேரொருவர் உடன் பழகிக் கொண்டிருப்பதைப் பார்த்த பூஜாவிற்கு யாரோ பின் முதுகில் கூர்மையான கத்தியைக் கொண்டு குத்தியது போல் இருந்தது. பிறந்த குழந்தை தன் தாய் வயிற்றில் இருந்து வெளியே வந்தவுடன் 
வீல் வீல் எ‌ன்று கத்துமாம்; அதை போல் தானும் கத்தி அழ வேண்டும் என்று நினைத்தாள். உடன் இருக்கும் படி கெஞ்சினாள்; கதறினாள். அவன் மனம் இறங்கவில்லை, இறுதிவரை. "நான் எடுத்த முடிவு உன்னை காயப்படுத்தினாலும் உன் நன்மைக்கே நான் இதை செய்தேன்". 
நெருக்கமாக இருந்த ஒருவர் தன்னை வேண்டாம் என்று உதறி செல்லும் தருணத்தை முதல் முறையாக உணர்கிறாள்; துடித்தாள். 




பூஜா முன்பு போல் நம்முடன் பழகுவது இல்லை என்று கவனித்த அவளின் நண்பர்கள், உண்மையைக் கண்டறிய நினைத்தார்கள். அதற்கு காலமும் கை கூடியது. ஒரு நாள்... பூஜாவை காணவில்லை என்று நண்பர்கள் அனைவரும் தேடிக் கொண்டிருந்த வேளையில், பூஜா தனியே ஒரு வகுப்பறையில்  தனக்கு நிகழ்ந்ததை நினைத்து வருந்திக் கொண்டிருந்தாள். சில மணி நேரம் கழித்து, அனைவரும் அங்கு வந்தனர். அவனும் வந்தான். பூஜாவின் மேல் என்னென்ன புகார் சொல்ல முடியுமோ அனைத்தையும் சொன்னான். அனைத்தையும் கூறிய அவனுக்கு , அவன் என்ன செய்தான் என்று கூற வாய் வரவில்லை போலும். நாம் பழகிய ஆளா இவன் என்று கரு விழி நகராமல் அவனையே கவனித்துக் கொண்டிருந்தாள், பூஜா. புண் பட்ட மனதுக்கு என்ன தோன்றியது என தெரியவில்லை, பளார் என்று அவன் கன்னத்தில் ஒன்று விட்டாள்.
அறை முழுதும் நிசப்தம். பூஜா உடனே அங்கிருந்து வெளியேறினாள். 
அவள் கண்களில் வடியும் கண்ணீர் துளிகளின் வலி அவளுக்கு மட்டுமே புரியும் என்று ஆழ்மனம் நினைக்கும் போது அவள் நண்பர்கள் கண் எதிரே வந்து நின்றனர்.




 அதில் ஒருவள் சொன்னாள் " இந்த மாதிரி ஒருவன் உன் வாழ்க்கைக்கு தேவையா? உன்னை பற்றி குறைகள் மட்டுமே சொல்ல தெரிந்த இவனுக்கு உன்னுடைய நிறைகள் நினைவில் இல்லை. மறந்து விடு; நாங்கள் இருக்கிறோம் " 10 வருடங்கள் மேல் ஆகின்றன, இ‌ன்று‌ம் அவள் கூறியது நினைவில் இருக்கிறது. காதல் ஒரு பட்டாம்பூச்சி போன்றது. அது அழகாக இருக்கிறது என நினைத்து அதை கையுள் அடக்கி கொள்ள பார்த்தால் அது இறந்து விடும்.  அதை தன் போக்கில் விட்டு அழகு பார்த்தால் அது நம்முடனே இருக்கும். என்ன, சரி தானே?
தொடர்ந்து என்னவெல்லாம் நடந்தது, பூஜா இதை எப்படி எதிர்க்கொண்டாள் என்பதை அடுத்த chapter- இல் படித்துத் தெரிந்துக் கொள்ளுங்கள்.


June 2011

 ஜூன், 2011



MLT ( Medical Lab Technologies )துறையை மறந்து, பூஜா தன் கல்லூரி படிப்பை photography- ல் மேற்கொண்டாள். 5 ஆண்டு degree course - சை |Ipoh வில் உள்ள ஒரு பல்கலைகழகத்தில் பயின்று வந்தாள். அங்கு அவளுக்கு கிடைத்த இரு தோழியின் நட்புறவு நீண்ட நாள் தொடரும் என்று அவள் உள் மனது அன்றே கணித்திருந்தது போலும்.



 அவர்களின் friendship மலர்ந்து இணைப் பிரியா நண்பர்கள் ஆனார்கள். கல்லூரியில் அனைவரும் அவர்களை 3 ரொசெஸ் என்று அன்புடன் அழைப்பார்கள். இம்மூவரும் ஒன்றாக வாழ்ந்த காலங்களுக்கு மீண்டூம் ஒரு வழி பயணம் செய்ய பூஜா இன்று வரை ஏங்குகிறாள். பூஜாவின் கள்ளங்கபடு இல்லாத மனதை அனைவரும் விரும்பினர். அதனாலே அவளுக்கு மேலும் பல நண்பர்கள் கிடைத்தனர். குறிப்பாகச் சொன்னாள் 6  நண்பர்கள்.




மகிழ்சியான தருணங்கள் மட்டும் வாழ்க்கையாக முடியாது அல்லவா ? இரவில் கண்கூசா ஒளி வீசும் நிலவின் கீழ் அழைகடல் வந்து மெல்ல கறையைத் தீண்டிச் செல்லும் வண்ணமாக இருந்த பூஜாவின் மனதில் ஆழிப்பேரழை  தாக்க ஆரம்பித்த காலம் அது...


2019 சுகமான சுமைகள்

 சரியாக 5 வருடங்கள் கழித்து, பூஜாவின் மனதில் மீண்டும் மலர்ந்தது அந்த காதல் கொடி. இடைப்பட்ட காலத்தில் பூஜா யாரையும் பார்க்கவில்லை. கல்லூரி வா...